கிறிஸ்தவ கவிதைகள்


படைத்தான் உலகத்தை
பாவிகளை உருவாக்க அல்ல,
பாதியில் நிறுத்திடவும் அல்ல,
பக்குவமாய் பரலோகம் ஆக்கிடவே
  
ஏவாளில் தொடங்கிய பாவம் 
எதுவரை தொடரும் - ஆதாமைப் போல்
அற்பநேரத்தில் அறிவை இழந்தால்
என்றும் தொடரும் ஆக்கினைகள்

வேதம் தந்த போதனை நியாயப்பிரமாணம்
அதனையே பாவிகள் மத்தியில்
பக்குவமாய் வாழ்ந்து காட்டினார்
எங்கள் இயேசுபிரான்

சிலுவை சொன்ன பாடம்- நம் பாவங்கள்
நீங்கவே, பாதாளத்தில் விழ அல்ல- ஆனால்
விருட்சமாய் படர்ந்து வளர்கிறது
பாவிகள் சாம்ராச்சியம்

நீதித் தராசினிலே தள்ளாடுகின்றன
நியாயப்பிரமாணமும்,
பாவத்தின் சம்பளமும்
என்று காண்போம் சமநிலை

யுத்தங்களும், சத்தங்களும்,
கொடூரங்களும், வன்மங்களும்,
இன்றல்ல, நேற்ரல்ல காயீன்
முதல் ஆரம்பித்தவையே

சரீரப் பிரகாரமய் வாழ்வோன்-பாவத்திலே
வீழ்கிறான்-பரிசுத்த இருதயத்தில் வாழ்வோன்
இறுதிவரை இன்பமாய் நிலைத்திடுவான்- இதனை
நன்கு அறிந்து ஆராய்ந்தால் அதுவே யதார்த்தம்

பணம், பொருள், மது, மாது இவைகள் என்றுமே- மனித
மனங்களை மாற்றி தறிகெட்ட வாழ்வை உருவாகும் 
தளராத மன உறுதியுடன் அவர் சமுகத்தில்-நிலையாய்
நிற்போனே நித்திய ஐஸ்வர்த்தைக் காண்பான் 


பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் என்ற பெயரில்-ஆன்மீகம்
படுகுழியை நோக்கி செல்கிறது-பாவமோ படி ஏறிச் செல்கிறது
கழிவறை தொட்டு பாலியல்முதல் பழக்க வழக்கங்கள் வரை
எல்லாமே எப்படி எப்படி அமைய வேண்டும்- என்று
வேதத்தில் அன்றே வகுத்து கொடுத்து விட்டார்

ஏன்?, எங்கே?, எப்படி?, எதற்கு?, என்ற கேள்விகள்
இல்லாமல் வாழ்க்கை இல்லை,- வாசிப்பதால் மனிதன்
பூரணமடைகிறான்,- கேள்வி கேட்பதால் தெளிவு
பெறுகிறான்- நல்ல ஞானத்தை பெறவே சொன்னார்
     தட்டுங்கள்  திறக்கப்படும்
     கேளுங்கள் கொடுக்கப்படும்
     தேடுங்கள்  - கண்டடைவீர்கள்

உலகம் உயர் நிலை பெறவேண்டும் -அதன்
உண்மை நிலையை ஆராய்ந்து அறிய வேண்டும்,
எல்லாம் எழுதப்ப்ட்டவையே என்கிறது வேதம்.

அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
இது முன்னோர் மொழி-உலகத்தின் கண்களுக்கு
உண்மை நிலைமை அறியாது-உள்ளத்தின் ஆழத்திலேதான்
உணரமுடியும், இதை சொல்லித் தெரிவதில்லை
அனுபவத்தால் மட்டுமே அறியலாம்,

தெளிந்த ஞானமில்லா வாழ்வு- பாதாளத்தை
நேக்கியே செல்லும், ஞானத்தை தேடுவோனே
ஆண்டவருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பமாகும்

பாதை எங்கே? பயணம் எங்கே? என்று பாதி
வழியில் பரிதவிப்போனே- இரட்சிப்பின்
வழியில் இறங்கி - இறைவன் சித்தம் நடந்தால்
இன்ப வாழ்வைக் காண்பாய் இது என்றுமே நிதர்சனம்

பாரிய அலை மோதும் சமுத்திரத்திலே உன்
வாழ்க்கைப் படகு தத்தளித்து செல்கிறது -இரட்சிப்பு
எனும் திசைகாட்டி மூலம்-அவர் வார்த்தையில் வழி
நடந்தால் வெற்றி எனும் துறைமுகத்தில் நங்கூரமிடுவாய்

நாத்திகம் என்றுமே தித்திக்கும் விசாலமான பாதைகள்
ஆன்மீக பாதை என்றுமே கரடுமுரடு ஆனதாக தோன்றும்
மெய்வாழ்வை நோக்கிச் செல்லும் வாசல் இடுக்கமும்-வழி
நெருக்கமுமாய் இருக்கும் என்றார்

இடுக்கண்ணில் வீழ்வோரே அதிகமாய்  இறைவனைத் தேடுகிறான்
ஆகவேதான் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே
நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான்
உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்     (மத்11-28)

சொந்த பந்த உறவுகள் வெறுத்தாலும் அவர்
நெறியில் நிற்போரை வேதம் சொல்கிறது 
கலங்காதே திகையாதே நம் தேவன்
உன்னோடு இருக்கின்றார்                               (யோசுவா 1-9)

வாழ்க்கைப் பாதையிலே பாவச்சேற்றிலே மிதித்தவன்
திக்குத்திசை தெரியாது திண்டாடுவான் அவன்
பாவ மன்னிப்பு பெற்று இரட்சிக்கப்பட்டால்
திக்கற்றவர்களாக என்றும் விடமாட்டேன் =என்றார்  (யோவான் 14-18)

முகம் பார்த்து முகத்துதி செய்யும்  -இவ் உலக
மனிதரின் இருதயங்களை ஆராய்ந்து அறிகின்றவர்
உன்னை விட்டு விலகுவதும் இல்லை - உன்னை
என்றும் கை விடுவதும் இல்லை                        (உபாகமம்31-6)

இயேசு, யோபு, பவுல் என எவரையுமே விட்டு வைக்காத சத்துரு
எம்மை மட்டும் விட்டு வைப்பானா? -ஊழியப் பாதையில்
காலடி வைத்தவன் இடுக்கண் காண்பது நிச்சயமே,
நிலையான மன உறுதியுடன் பற்றி நிற்போரை
உன்னை வாலாக்காமல் தலை ஆக்குவேன் என்றார் (உபாகமம்28-13)

உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்தும்
என்ற விவேகானந்தருக்கு முன்பே உன் கண்னில்
உள்ள துரும்பை நோக்காது - பிறர் கண்ணின்
துரும்பை நோக்குவது ஏன்? என்றார்                       (மத் 7-3)

ஒரு பொய்யை சொன்னால் அதனை மறைக்க
ஆயிரம் பொய் சொல்ல வேண்டி வரும் என்பர் -ஆகவே
கொஞ்சத்திலே உண்மையாய் இருந்தால்
அதிக அளவில் அதிபதியாய் இருப்பாய் என்றார்   (லூக்கா 16-10)

பாவம் இல்லா வாழ்க்கை வாழ நல் விடயங்களை பார்ப்பதும்,
படிப்பதும், கேட்பதும், பேசுவதாலும் அல்ல, அவற்றை எல்லாம்
நடைமுறைப் படுத்துவதனாலேயே- என் வசனங்களைக் கேட்டு
அதன்படி நடப்பவர்களே எனக்கு பிரியமானவர்கல் என்றார்

நான் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டு அதன்படி
செய்கிறவன் எவனோ அவனைக் கன்மலையின் மேல்
தன் வீட்டைக் கட்டிய அறிவுள்ள
மனிதனுக்கு ஒப்பிடுவேன் என்றார்       (மத்தேயு 7-24)



பாவத்தில் வீழ்வது இயல்பானதே,- பாவியாக கிடப்பதே
கேவலமானது, பாவியே உன்னை பரிசுத்தவானாய் மாற்றவே
10 கட்டளைகளையும் கொடுத்தார். வேதத்தின் மூலம்
வார்த்தைகளையும் கொடுத்தார்,வாழ்ந்தும் காட்டினார்

வேதத்தின் தத்துவங்களை காது உள்ளோன்
கேட்கக் கடவன்- என்றார். இன்று நாம் படிப்பறிவு
உள்ளோன் படித்தறியக் கடவன், பகுத்தறிவு உள்ளோன்
ஆராய்ந்து அறியக் கடவன் என்போம், அவர் வசனங்கள்
என்றுமே இருபுறமும் கருக்குள்ள பட்டயமே




No comments:

Post a Comment